நடிகை சமந்தா செல்பி எடுத்த ரசிகர்களை திட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் தமிழில் வெளியான 96 திரை படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜானு படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பதிக்கு நடிகை சமந்தா சென்றார் கீழ் திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக மேலே செல்லும்போது தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் அவரை செல்பி எடுக்க முயன்றார். அதற்கு கோபப்பட்ட சமந்தா. ‘செல்பி எடுக்க வேண்டிய இடமா இது’ என்று கோபமாகக் திட்டியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா அடிக்கடி திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.