சினிமா

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (61) நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக மும்பை உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு மேற்கொண்ட ரேபிட் டெஸ்ட் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதே சமயம் அவருக்கு Swab Test பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதனையே சஞ்சய் தத் ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு தெரிவித்ததாவது:-

ALSO READ  பண்டைய கிரேக்கர் தோற்றத்தில் தனுஷ் - வைரலாகும் பிறந்தநாள் காமன் டிபி..!

நான் நலமாக உள்ளேன். தற்பொழுது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. லீலாவதி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்பி விடுவேன். எனக்கு வாழ்த்துக்களையும், ஆசியும் வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ  பிரபல நடிகர் திடீர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்….

சளிப் பரிசோதனையில் இவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தால், இரண்டு மூன்று நாட்களில் வீட்டிற்கு செல்ல சஞ்சய் அனுமதிக்கப்படுவர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் அமிதாப் பச்சன்

Admin

அவ்வை சண்முகி குட்டிப்பாப்பாவா இது

Admin

“ஜகமே தந்திரம்” படத்தின் அப்டேட்டை அறிவித்த படக்குழு…!

News Editor