புதுடெல்லி:-
கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க இயலாது என்று உச்ச நீதிமாற்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதைதொடர்ந்து கொரோனா இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்து கொள்கையை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமாற்றம் உத்தரவிட்டு இருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு 183 பக்க பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3.85 லட்சத்துக்கும் மேல் உள்ளது. அதன்படி, ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு கொடுக்க இயலாது. இயற்கை பேரழிவுகளுக்கு மட்டுமே இழப்பீடு நிவாரணம் வழங்க முடியும். தற்போது சுகாதார செலவு அதிகரித்துள்ளது. மேலும் வருவாயும் குறைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை உச்ச நீதிமாற்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.