மின்னணு பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்பட்டது. இது ஆன்லைன் கட்டண முறையை ஊக்குவித்து முறைகேடுகளை தடுக்கும் என்ற வகையில் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது.
பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணமும், இணைவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது.இதன்மூலம் 80% வாகனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 100% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனது. உடனடியாக இந்த திட்டத்தில் சேர்ந்து அனைவரும் பயனடைவார்கள் என நம்பப்படுகிறது.