தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் சட்டசபை உறுப்பினர்களின் பதவிகாலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுவதால் இந்தியாவே தலைநகரின் தேர்தலை உற்றுநோக்கியுள்ளது.
கட்சிகள் செய்த தீவிர பிரசாரங்கள் கடந்த 6ம் தேதியுடன் ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் ஜட்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் தேர்தலுக்காக மெட்ரோ ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.