டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜாமியா கோ-ஆர்டினேஷன் கமிட்டி (JCC) CAA மற்றும் NRC ஐ எதிர்த்து ஜாமியாவிலிருந்து டெல்லி ராஜ்காட் வரை பேரணி சென்றது.
தீடிரென அங்கு வந்த நபர் ஒருவர் ஜாமியா மிலியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாரும். “ஆஸாதி” என்று கத்திக்கொண்ட துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஜாமியா மிலியா மாணவர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த நபரை கைது செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா:-
இதில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை அணையரிடம் கூறியுள்ளேன். இது போன்ற தாக்குதல்களை மத்திய அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இதில் ஈடுபட்ட குற்றவாளி தப்பிவிட முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.