ஜெய்ப்பூர்:
அவசர காலங்களில், விமானத்தின் ஓடுப்பாதையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைகள் தரமாக உள்ளதா எனும் பரிசோதனை முயற்சி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது.
இன்று ராஜஸ்தானில், போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. முதலாவதாக விமானப்படைக்கு சொந்தமான சி 130 ஜே சூப்பர் ஹெ்ரகுல்ஸ் விமானம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, விமானப்படை தளபதி பதுரியா ஆகியோருடன் வந்து தரையிறங்கியது.
இதனை தொடர்ந்து ஜகுவார், சுகோயச் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கியதுடன் அங்கிருந்து கிளம்பி சென்றன.
போர் விமானங்கள், தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கும் நிகழ்ச்சியை, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பார்வையிட்டார்.
இந்திய நாட்டில் ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலை உட்பட நாடு முழுவதும் 12 தேசிய நெடுஞ்சாலைகள், அவசர காலங்களின் விமான ஓடுப்பாதையாக பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.