தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனையை விதித்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,முன்னாள் காங்கிரஸ் தலைவருமாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988 ல் பாட்டியாலாவில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் மரணம் அடைந்தார்.
இது தொடர்பான வழக்கில் பல மேல்முறையீட்டுக்கு பின்னர் 34 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து சித்து விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது .மேலும் தீர்ப்பு குறித்து நவ்ஜோத் சிங் சித்து சட்டத்திற்குட்பட்டு நடப்பேன் என கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.