தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலே மிகப்பெரியது காஸிபூர் மலர்சந்தை பிரதானமாக மார்க்கெட்டாக திகழ்கிறது. இந்நிலையில் காஸிபூர் மலர் சந்தை பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ எடையுள்ள அதிக சேதத்தை ஏற்படுத்துக்கூடிய சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை ஆழமான குழியை தோண்டி அதில் வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் தகுந்த பாதுகாப்புடன் செயலிழக்க செய்தனர்.
வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெடிகுண்டுகளை வைத்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.