புதுடில்லி :
ஒன்றிய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது.
புதிய சட்டமானது வரும் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
15 ஆண்டுகளாகி விட்ட பழைய வாகனங்கள் இயக்கப்படுவதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர். ஆகவே 15 ஆண்டுகளான பழைய வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதுபோன்று புதுடில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயணிப்பதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்திட்டுள்ளனர்.
இதையடுத்து, 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்க, ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தை எட்டு மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போது, 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடியிருக்கும் பழைய கார்களின் பதிவுகளை புதுப்பிக்க, 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் எட்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணமும் எட்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.