இந்தியா

“இந்திய அரசே! பாலங்களை நிறுவுங்கள்…சுவர்களை அல்ல” பாஜகவை விமர்சிக்கும் ராகுல் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேல் விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர்.

இதன் காரணமாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு, காசிபூர், டிக்ரி போன்ற இடங்களில் இன்று இரவு வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக டெல்லி காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் டெல்லி எல்லையான காசிபூர், டிக்ரி இடங்களில் டெல்லி காவல்துறையினர் ஆணிகளை பதித்துவைத்துள்ளனர்.   

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி புகைப்படத்துடன் ட்விட்டரில் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அதில், “இந்திய அரசே பாலங்களை நிறுவுங்கள், சுவர்களை அல்ல” என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  'பாப்ரி மஸ்ஜீத் தூட்டி ஹை! காசி, மதுரா பாக்கி ஹை' அயோத்தியை தொடர்ந்து குறிவைக்கப்படும் காசி மற்றும் மதுராவை...

#rahulgandhi #farmeract #delhifarmer #congressmprahul #bjp #farmeract #farmerprotest #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..

Shanthi

இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

News Editor

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா சென்றார், மேலும் தனது தந்தை குறித்த தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவரின் மகன் கோரிக்கை:

naveen santhakumar