சுக்மா:-
சட்டீஷ்கரில் கடந்த சனிக்கிழமை தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ரிசா்வ் படை, சிறப்பு அதிரடி படை , மத்திய ரிசர்வ் படையின் CoBRA படை ஆகியவற்றை சோ்ந்த 600 வீரா்கள் அப்பகுதியை நோக்கி சென்றனா்.
கோரச்குடா மலைப் பகுதி அருகே மின்பா கிராமத்தின் வனப்பகுதிக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த சுமார் 250 நக்ஸலைட்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனா்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.
இதில் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் ராய்ப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, துப்பாக்கி சூட்டின் போது 5 அதிரடிப்படை வீரர்கள் 12 மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் என 17 மாயமாகினர்.
இந்த 17 வீரா்கள் நேற்று தேடுதல் படையினர் மூலம் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர் இன்று பஸ்டார் சரக போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி வன்மையாக கண்டித்துள்ளார்.