ஜம்மு:-
கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு நாடு தழுவிய ஊடரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு அடங்கமறுத்து அத்துமீறி அலட்சியமாக சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு பல நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.
இதைத் தவிர இவ்வாறு அலட்சியமாக திரிபவர்களை போலீசார் தங்கள் பாணியில் லத்தி அர்ச்சனை செய்து அனுப்புகிறார்கள்.
இந்நிலையில் ஜம்மு போலீசர் சற்று வித்தியாசமாக ரன்பீர் சிங் புரா, பிஷ்னா உள்ளிட்ட நகர்களில் அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சென்றவர்களை எச்சரிக்கும்வகையில் அவர்களது கை மற்றும் நெற்றியில் கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் என்று அழியாத மை கொண்டு முத்திரை வைத்தனர்.
இந்த முத்திரை குறைந்தது 2 வாரத்துக்கு அழியாமல் இருக்கும்.
இதேபோல் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சுற்றிய இளைஞர்களை பிடித்த போலீசார் அவர்கள் கையில் சுயநலவாதி மற்றும் பெற்றவர்கள் என்று எழுதிய பதாகைகளை கையில் பிடித்து நிற்க சொல்லி தண்டனை கொடுத்தனர்.