கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் 24 இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. முதல் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி, வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு நீடிக்கும்.
ஆனால், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊர் அடங்கின் முதல் நாளான மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக இருந்தது, ஆனால் தற்பொழுது 99 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? அல்லது நீக்கப்படுமா? அல்லது பகுதியா நீக்கப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துவருகின்றன.
இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான Boston Consulting Group (BCG) இந்தியாவில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
இது இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்கள் இவற்றின் செயல்பாட்டை ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று கேபினட் செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.