புது டெல்லி:
இஸ்ரேலிய நிறுவனத்தை கொண்டு பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் என இந்தியர்கள் 300 பேர் உளவுபார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் உளவுபார்க்கப்பட்டவர்கள் பட்டியலை 17 சர்வதேச ஊடகங்களும், பாரிஸை சேர்ந்த கிரிட்டன் சோரிஸ் தொண்டு நிறுவனம், அம்னிஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
பெகாஸஸ் ஸ்பைவேர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்த ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பெகாஸஸ் உளவு திட்டம் குறித்து வெளியாகியுள்ள நிலையில் ஒன்றிய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.