சண்டிகர்:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா இருவரையும் அமரீந்தர் சிங் சந்த்தித்தார்.
![Punjab Lok Congress: Capt Amarinder Singh announces name of his party - India News](https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202111/cvsv.jpg?629rlqiSCv.TlAIFmDZ2fKw11F6NcO03&size=770:433)
இந்த சந்திப்புக்கு பின்னர் அமரீந்தர் சிங் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக செய்திகள் கசிந்தன. ஆனால் தற்போது அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்., தலைவர் சோனியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியால் ஆதரிக்கப்பட்ட சித்துவின் ஒரே எண்ணம், என்னையும் எனது அரசாங்கத்தை களங்கப்படுத்துவது தான் எனக் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், தான் துவங்க உள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்னும் பெயரை வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
![Sonia Gandhi's Punjab panel hears Sidhu gang's grouses against CM Amarinder amid 2022 fear](https://img.republicworld.com/republic-prod/stories/promolarge/xhdpi/dhu5oetvsui1ghnw_1622468781.jpeg)
புதிதாக துவங்கியுள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ எனப் அமரீந்தர் சிங் பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.