டெல்லி:-
குறைந்த வருவாய்ப் பிரிவினர் மலிவு விலையில் வீடுகளை பெறும் வகையில், உலக வங்கியுடன் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ஆயிரத்து 500 கோடி மற்றும் 370 கோடி மதிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் மலிவு விலை வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் மலிவு விலைவீடுகள் கட்டுவதை ஊக்குவிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, உலக வங்கியின் சார்பில் நாட்டு இயக்குநர் (இந்தியா) ஜுனைத் கமால் அகமத் ஆகியோர் இந்த கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தமிழ்நாடு மாநில அரசின் முதன்மை இருப்பிட ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் நகர்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி கிடைக்கும் என உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.