இந்திய ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச wifi சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 400க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவசமாக wifi சேவைகளை வழங்கி வந்தது. இதற்கு லாக்-இன் செய்ய நம் செல்போன் எண்ணை பதிவிட்டு OTP உதவியுடன் நாம் இந்த சேவையை இலவசமாக பெறலாம்.
இந்நிலையில் உலக அளவில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த wifi சேவையை கூகுள் நிறுவனம் 2020ம் ஆண்டிற்குள் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் நிலையங்களுக்கும் RailTel நிறுவனம் wifi சேவை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலுள்ள 5600 ரயில் நிலையங்களில் கூகுள் வழங்கிய 415 ரயில் நிலையங்களை தவிர்த்து மற்றவைகளுக்கு RailTel நிறுவனம் தான் wifi சேவையை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில், இந்தியாவில் மலிவு விலையில் மொபைல் டேட்டாக்கள் கிடைப்பதால் சேவை நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது.