பெத்லேஹம்:-
கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக, பாலஸ்தீனப் பகுதியில் உள்ள இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லேஹம் தேவாலயம் (Church of The Nativity) மூடப்பட்டது.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் 4 பாலஸ்தீனியர்களுக்கு கொரோனா தொற்று (COVID-19) உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து கொரானா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பாலஸ்தீனப் பகுதியிலுள்ள தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை மூடுவதற்கு பாலஸ்தீன அரசு உத்தரவிட்டது.
இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லேஹமிலுள்ள கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான கிறிஸ்து பிறப்பிட தேவாலயத்தையும் மூட தேவாலய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். பாலஸ்தீன அரசு மீண்டும் அனுமதிக்கும் வரை பிறப்பிட தேவாலயம் மூடப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெருஸலேமில் உள்ள யூதர்களில் புனித ஸ்தலமான மேற்கு சுவருக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இதேபோல் அதன் அருகில் உள்ள AL-AQSA மசூதிக்கும் கட்டுபாடுகள் எதுவும் விதிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.