நியூடெல்லி:-
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தங்களால் இயன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில் முவக்கவசங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாஸ்க்குகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா கோவிந்த்.
இவர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள சக்திஹாத் என்ற பகுதியில் தையல் மிஷினில் உட்கார்ந்து மாஸ்க்குகளை தைத்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு தயாரிக்கப்படும் மாஸ்குகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள கொரோனா நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.