இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பு மருந்து தயாரிப்பதை இந்தியாவில் அதிகரிக்க வேண்டும் என்றும் தடுப்புமருந்து செலுத்துவதை பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பு மருந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் நீண்ட வரலாற்றையும் உலகின் சிறந்த தொழிற்சாலைகளையும் கொண்ட இந்தியாவில் தற்போது கொரோனா அதிகரித்திருக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
#TamilnaduHealthSecretary #Tamilnadu #TamilThisai #corona #Coronavirus #Covid19 #Tamilnadu #DrRadhakirshnan #corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #IndiaFightCorona #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients