தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடெல்லி:-
பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொரோனா வைரஸ் விவகாரம் குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.
மொத்தம் 9 முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில் 5 மாநில முதல்வர்கள், மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். 4 மாநில முதல்வர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.