இந்தியா

சினிமா பாணியில் திருமணம்….காதலனுடன் கைக்கோர்ப்பு…தாலி கட்ட காத்திருந்த மாப்பிள்ளைக்கு அல்வா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கானா:

திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் சினிமா பாணியில்  குடிபோதையில் வந்த காதலனுடன் மணப்பெண் கிளம்பி சென்றது மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்ட தயாரான போது அங்கு வம்சி என்ற இளைஞன் குடிபோதையில் வந்து நான் தான் திவ்யாவின் காதலன் என கூறினார். இதை கேட்ட பிரவீன்குமார் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் திவ்யா, வம்சியுடன் கிளம்பி செல்ல தயாரானார்.

இது குறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலிசார் மணமகன், மணப்பெண் மற்றும் வம்சி என மூவரையும் விசாரித்தனர்.அப்போது மணப்பெண் திவ்யா தான் வம்சியை காதலிப்பதாகவும் அவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

ALSO READ  மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய நல்லாசிரியர் விருது தமிழ்நாட்டிலுள்ள இருவருக்கு வழங்கப்படுகிறது

அதே சமயம் பிரவீன்குமார் போலிசில், என்னை வம்சி கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என புகார் கூறினார். இது தொடர்பாக வம்சியை போலிசார் விசாரித்தார்கள், மேலும் திவ்யா காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

UPSC தேர்வில் ராகுல்-மோடி வெற்றி.. 

naveen santhakumar

இறப்பு சான்றிதழ்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் என்ன?

News Editor

கால்வான் நமதே!!.. மோடி லடாக்கில் படை வீரர்களிடையே கூறிய திருக்குறள்…

naveen santhakumar