இந்தியா

உச்சகட்டம்… இந்த மாநிலத்தை உலுக்கி எடுக்கும் கொரோனா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுடன் ஒப்பீட்டளவில் தொற்று பாதிப்பு 44% அதிகரித்துள்ளது.

இதுவரை 143 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், மொத்த பாதிப்பு 781ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 21 மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேரும் இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 167 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் புதிதாக 2,510 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. நேற்று 1,377 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு 82% அதிகமாக பதிவாகியுள்ளது.


Share
ALSO READ  6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை…தெலங்கானாவில் பரபரப்பு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேருந்துகள் இயங்க அனுமதி- முதல்வர் அறிவிப்பு…!

naveen santhakumar

இதைவிட விட சிறப்பான மருத்துவத்தை இங்கிலாந்தில் பெற்றிருக்க முடியும் என்று நான் கருதவில்லை- கேரளாவில் கொரோனாவிலிருந்து மீண்ட பிரிட்டிஷ்காரர்…

naveen santhakumar

ஜம்மு காஸ்மீரில் பேருந்தும் ஓட்டும் முதல் பெண்; இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

News Editor