புதுடெல்லி:-
ஓராண்டுக்கு எந்தவித புதிய அரசு திட்டமும் கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு (அடுத்த நிதியாண்டு வரை (FY21)) எந்தவிதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய திட்டங்கள் அரம்பிப்பது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆத்மநிர்பார் பாரத் மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா ஆகிய திட்டங்களில் மட்டுமே அரசு சார்பில் செலவுகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளையில் 500 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.