சென்னை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.
நீதிபதி பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தொடுவதால் அவரது கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகள் காரணமாக, மாநிலத்தின் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து. அவர் மார்ச் 31, 2009 முதல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார்.
நீதிபதி பால் கிருபாகரன் வழங்கிய அதிரடி தீர்ப்புகள் :
மூத்த நீதிபதியான பால் கிருபாகரனின் சமூகப் பிரச்சனைகள் குறித்த அவரது கருத்துகளும் தீர்ப்புகளும் மக்களிடையே வெகு பிரபலம். சர்ச்சைக்குரிய பிரச்சினைகளிலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்தார்.
மருத்துவ சேர்க்கைக்கான தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதால் மாணவர்களின் தற்கொலைகள் அரசியலாக்கப்படுவதையும் அவர் விமர்சித்தார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ விதிமுறையை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட்டர். வழக்கறிஞர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும், சட்டத்தை மதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருமகள் ஜெ.தீபா மற்றும் மருமகன் ஜெ.தீபக் ஆகியோரை அனைத்து சொத்துக்களையும் வாரிசுரிமை பெற்ற சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் எஸ்.நளினி மற்றும் அவரது கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன் இலங்கை மற்றும் இங்கிலாந்தில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசவும் அனுமதித்தார்.
மக்கள் நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுவதையொட்டி இன்று பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.