வங்கி கணக்கு வாயிலாக மாதாந்திர தவணைத்தொகைகள் மற்றும் பில்களை செலுத்தும் ஆட்டோ டெபிட் முறையில் இன்று முதல் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
நமது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தேதியில் சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதியில் தாங்களாகவே எடுத்துக்கொள்வார்கள்.
ஆனால் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவ்வாறு பணம் எடுக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களாகவே பணம் எடுக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆர்.பி.ஐ.
இதன் படி பணம் எடுப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அது தொடர்பாக அது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும். மேலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகை எனில் ஒ.டி.பி. வாயிலாக ஒப்புதல் பெறப்பட்ட பிறகே பணம் எடுக்க முடியும்.