தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மனைவி பிரிந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி 2 மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.
கேரளா மாநில எல்லையான நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்த சபீர் தனது மனைவி ரெஜினாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே ரெஜினா அவரது சகோதரரின் வீட்டில், 12 வயது மகன் அல்தாஃப் மற்றும் 9 வயது மகன் அன்ஷாத்துடன் வசித்து வந்தார். மனைவியை பிரிந்தாலும், மகன்களோடு அவ்வப்போது வெளியே சென்றுவரும் சபீர், கடந்த வெள்ளி அன்று இரண்டு மகன்களையும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்று கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைதொடர்ந்து அன்றிரவு, தனது மூத்த மகனை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை சபீர், அதன்பின்னர் தனது இளைய மகனுடன் சேர்ந்து ஆழமான குளத்தில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.