கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர்.
இதை எதிர்கொள்ள ஆப்ரேஷன் `விஜய்’ திட்டம் மூலம் இந்தியா தயாரானது. கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது இந்த போரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இறுதியாக இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகிறேன். நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரம் எங்களுக்கு, தினம்தோறும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒன்றிய அரசின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது .