நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நச்சத்திரமாக திகழ்கிறார். இந்திய சினிமாவிற்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அவருக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
#DhadhaShakibPhalkeAward #Rajinikanth #rajinikanth #Superstar #Annaththe #TamilThisai #Cinema #CinemaTrending #TamilNadu #Rajini #kamalhassan #Cinemanews