சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ்.
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையிலோ கடந்த 24 மணி நேரத்தில் 25,833 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் 58 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். இன்று 12,764 பேர் கொரோனா தொற்று குணமடைந்துள்ளனர். நேற்று 22,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 25,833 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.