ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களில் சிலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பியுள்ளனர். மீண்டும் பணிக்கு திரும்பிய அவர்களுக்கு சோதனை மேற்கொண்டதில் இரு தினங்களுக்கு முன்பு 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மேலும் 152 பேருக்கு 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 250 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொங்கல் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.