தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆங்கில பாட பொதுத்தேர்வு வினாத்தாளை மாணவன் ஒருவன் டிக்டாக்கில் வெளியிட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தற்சமயம் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் ஆங்கில பாடத்திற்கான பொதுத்தேர்வு வினாத்தாள் டிக்டாக்கில் வெளியானது.அந்த சமயத்தில் தான் தேர்வும் நடைபெற்று கொண்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த பள்ளிக்கல்வித்துறை காவல்துறையில் புகார் அளிக்க, தேர்வு நடைபெறும் வேளையில் கேள்வித்தாள் எப்படி வெளியானது என்று விசாரணையில் இறங்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்குள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதும் மாணவன் யாருக்கும் தெரியாமல் தேர்வறைக்கு மொபைல் எடுத்துச்சென்று டிக்டாக் செய்துள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த மாணவனை இன்று சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.