காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையை இருந்து வருகிறார். இவர் தமிழில் மாரி, விஸ்வாசம், ஜில்லா போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார். அதனையடுத்து கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி காஜல் அகர்வால் கெளதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார், அதனையடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும் படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறினார்.