பொங்கல் விடுமுறை அன்று நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளளது.
தமிழகத்தில் ஜனவரி 14 முதல் ஜனவரி 17-ந் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜனவரி 16ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பார்ப்பதற்காக வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 14ம் தேதி பொங்கல் விடுமுறை தொடங்கும் நிலையில், 16ஆம் தேதி பிரதமரின் நிகழ்ச்சியை காண அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விடுமுறை ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.