Digital Lifestyle Monk தரணீதரன், சுரேஷ் ராதாகிருஷ்ணன், சக்திவேல் பன்னீர்செல்வம், முத்துக்குமார் ஆகியோர் இணைந்து உலகின் மிக நீண்ட மெய்நிகர் வணிக மேலாண்மை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சியாக கிளப்ஹவுஸ் வாயிலாக கிளப்ஹவுஸில் ’தமிழ் பிசினஸ் பீப்பிள்’ என்ற Chat room-ஐ உருவாக்கி உலகின் மிக நீண்ட மெய்நிகர் வணிக மேலாண்மை உரையாடலை ஏற்பாடு செய்து சாதனை படைத்துள்ளனர்.
வணிக மேலாண்மை குறித்து மாநாட்டில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நீயா நானா கோபிநாத், நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமரவேல், அடையார் ஆனந்த பவன் நிறுவனர் ஸ்ரீனிவாஸ் ராஜா, இதயம் குழு நிறுவனர் வி.ஆர் முத்து, தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி, டெர்பி கிளாதிங் நிறுவனர் விஜய் கபூர், மாற்றம் ஃபவுண்டேஷன் நிறுவனர் சுஜித் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முதலில், 24-24-24 என 24 மணி நேரம் 24 நிமிடங்கள் 24 நொடிகள் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வு 30 மணி நேரம் 30 நிமிடங்கள் 30 நொடிகள் வரை நீண்டு உலகச் சாதனைப் படைத்தது.
ஒரு செயலி வாயிலாக மெய்நிகர் உரையாடலாக 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள், பிரபலங்கள் உரையாட, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொடர்ந்து 30 மணி நேரம் கலந்துரையாடியது இதுவே முதல் முறை.
மெய்நிகர் வடிவில் தொடர்ந்து 30 மணி நேரம் இந்த உரையாடலை ஏற்பாடு செய்து ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் தரணீதரன், சுரேஷ் ராதாகிருஷ்ணன், சக்திவேல் பன்னீர்செல்வம், முத்துக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.