இந்தியா

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக  பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது . ஆகையால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறத்து பிரிட்டன் அரசு. உலகையே  தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட 70 % வேகமாக பரவுகிறது புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

 
இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தியது மதியமைச்சகம். 


இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 வரையில் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. 

ALSO READ  அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

இதனையடுத்து  இந்த ஊரடங்கு, இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும் என்றும், வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்தவர்களை கண்டறியும் பணிகள்  முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர்  எடியூரப்பா  தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரயில் கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் மக்கள் !

News Editor

மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை !

News Editor

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika