தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலா யமுனா நகர்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் இரு வாகனங்களின் டிரைவர்களும் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.