புதுடெல்லி,
புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்லும்போது பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
அதுபோன்று மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். அதுபோன்று அனைத்து கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..
அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 1000 இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்துகள் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அனைவரும் எப்போதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணியுமாறும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூறியுள்ளது.