பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்ற வெளியான அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இங்கல்ல , அமெரிக்க்காவில் தான்.
அமெரிக்காவின் சிகாகோ பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என கடந்தாண்டு புதிய கொள்கையை விதித்தது.
இது பாலியல் கல்வியின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. எச்.ஐ.வி தொற்று மற்றும் மாணவர்களிடையே எதிர்பாராத கர்ப்பம் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் பாலியல் நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிகாகோ பொது சுகாதாரத்துறையால் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.
இந்த அறிவிப்புக்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆணுறைகள் வழங்கப்படுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல, வரி செலுத்துவோரின் செலவில் இந்த திட்டத்தை அமலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.