அமெரிக்காவில் முதல் முறையாக வாடகைத்தாய் மூலம் சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறப்பில் குறை இருப்பவர்கள் செயற்கை கருத்தரித்தல் மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது நவீன உலகில் சர்வ சாதாரணமாகி விட்டது.
இதில் மனிதர்களை காட்டிலும் ஒரு படி மேலே போய் சிறுத்தைக்குட்டிகள் வாடகைத்தாயான மற்றொரு சிறுத்தை மூலம் பிறந்துள்ளன.
அமெரிக்காவிலுள்ள ஓஹியொ மாகாணத்தொல் உள்ள கொலம்பஸ் பூங்காவில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு 6 வயதான கிபிபி என்ற சிறுத்தை ஒன்று தாய்மையடைய முடியாத நிலையில் இருந்தது. இதனால் இரு மாதங்களுக்கு முன்பு அதன் சினைமுட்டைகளை பிரித்து, அவற்றில் கரு வளர்த்து இஸ்சி என்ற மற்றொரு சிறுத்தையின் கருப்பைக்குள் வைத்தனர்.
இதன்மூலம் வெற்றிக்கரமாக இரண்டு சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.