பழங்காலமாக தொடரும் சருமப் பிரச்னைகளில் மருத்தொல்லையும் ஒன்று. இது “பாப்பிலோமா வைரஸால்” வருகிறது. பொதுவாகவே மருவை சருமத்தில் கூடுதலாக வரும் திசுக்களின் கூட்டு என்றே சொல்வார்கள்.
மரு ஏன் வருகிறது தெரியுமா? நாம் நம் கழுத்தில் எடை கூடுதலான அணிகலன்களை அணியும்போது அவை அழுத்தப்பட்டு ரத்த ஓட்டம் தடைபடும். அதுவும் சருமத்தை முறையாக பராமரிக்காததும்தான் இதற்கு காரணமாகிறது.வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே இவற்றிற்கு தீர்வு காணலாம்.
*அன்னச்சிப்பழத்தை சாறு எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து அதை வெது,வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாள் இதை தொடர்ந்து செய்தால் மாற்றத்தை உணரலாம்.
*ஒரு துண்டு இஞ்சியை மரு இருக்கும் இடத்தில் தொடர்ந்து 2 வாரத்துக்கு தேய்த்தால் மரு உதிர்ந்துவிடும்.
*ஆளிவிதையை பேஸ்ட் போல் அரைத்து தினமும் பருவில் தடவலாம். இதேபோல் தினமும் மருவின் மேல் கற்பூர எண்ணெயை தடவினாலும் மரு உதிர்ந்துவிடும்.
*பூண்டு சாறை மரு இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணி கட்டி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இதேபோல் கற்றாழை ஜெல்லை மரு இருக்கும் இடத்தில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
*ராத்திரி தூங்குவதற்கு முன்பு, வெங்காயத்துண்டில் உப்பு தேய்த்து ஊறவைத்து காலையில் எழுந்து அதை பேஸ்ட் போல் அரைத்து அதை மரு இருக்கும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவ மரு உதிர்ந்துவிடும்.