தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது. அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் அமைச்சர்
எஸ்.பி. வேலுமணி, தான் போட்டியிடும் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல் கட்ட பரப்புரையை தொடங்கியுள்ளார்.அதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கரடிமடை, சென்னனூர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்த அவர், எந்த திட்டத்தை அரசு அறிவித்தாலும், அதனை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம், ஒரு முன்னோடி தொகுதியாக, தொண்டாமுத்தூரை மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.