தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தனது பயணத்தை தொடங்கி தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலா வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ”அதிமுகவில் எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை. அனைவரும் ஒன்றாக உள்ளனர். ஆனால் அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்றார்.
அதிமுக நிர்வாகி காரிலேயே சசிகலா வந்தது குறித்த கேள்விக்கு, ” அமைச்சர்கள், அதிமுக ,மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள்” என்றார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.