அரசியல்

ஊழலில் முதல்வரை முந்திவிட்டார் எஸ் பி வேலுமணி  : ஸ்டாலின் விமர்சனம் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமியை முந்திவிட்டதாக விமர்ச்சித்துள்ளார். 

தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை, கூட்டங்களையும் நடத்த  தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில்  கடலூர் மாவட்டம் பாரதிக்குப்பம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில், திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், சாலை வசதி, சிப்காட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின் ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத முன்னுரிமை என பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

ALSO READ  ஈபிஎஸ் - சசிகலா; ஒரே இடத்தில் இருவரும்- அரசியல் பரபரப்பு!

அதனைத் தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமியை முந்திவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமமுக சார்பில் இன்று விருப்பமனு விநியோகம் !

News Editor

அதிமுகவை எதிர் கொள்ள ஸ்டாலினுக்கு சக்தி இல்லை; முதல்வர் பழனிச்சாமி !

News Editor

மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

News Editor