தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார்,” மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளனர். மாற்றத்திற்கான கூட்டணி என்று பெயரில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இணைந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளோம். இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என கூறினார்.
#sarathkumar #tamilthisai #makkalaneedhimaiam #samathuvamakkalkatchi #IJK #tamilnaduelection #tnelection2021 #kamalhassan