தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களின் வேட்புமனு விநியோகம் செய்து வருகிறது. அந்தவகையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தலைமை அலுவலகத்தில் அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,” வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அம்மாவின் ஆசியோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிநடை போட்டு வருகிறார். எனக்கு பின்னாலும் கழகம் நூறாண்டு காலம் வாழும் என்ற ஜெயலலிதாவின் வார்த்தைக்கு ஏற்ப கழகத்தை நல்வழிப்படுத்தி எடப்பாடியார் வழிநடத்தி வருகிறார் என்று கூறினார்.
மேலும், நாங்கள் பிரச்சார மேற்கொண்ட போதெல்லாம் மக்கள் பத்தாண்டு கால சாதனைகளை புரிந்து கொண்டு தாங்கள் எடுத்துரைத்து வருவதை ஏற்றுக் கொண்டதன் மூலம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.
#admk #dmk #kadamburraju #tamilnadu #tngovernment #tamilnaduelection #electioncommissior #tamilthisai