தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சாந்த அவர், மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் குறித்து யார் மீதும், யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்றார். ஜெயலலிதா மரணத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
சசிகலாவை, அதிமுகவில் இணைப்பது குறித்து, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒங்கிணைப்பாளரும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.