இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று 5ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு 2வது ஒருநாள் போட்டி தொடங்குகிறது. ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரு அணி வீரர்களும் வலுவாக இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் 347 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியதால் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேசமயம் இப்போட்டியில் வென்றால் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.