விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சவுத்தம்டன்:

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது.

தொடர் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

ALSO READ  மாஸ்டரை புகழ்ந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா.!

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி !

News Editor

விடைபெற்றார் ரவிசாஸ்திரி – ஓய்வறையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமாக வழியனுப்பும் கூட்டம்

naveen santhakumar

இரண்டாவது முறையும் இப்படியா?… எப்படியிருக்கிறார் கங்குலி!

naveen santhakumar